வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதியிடம் மனு கொடுக்கிறார் ராகுல் காந்தி


வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒருபுறம் போராடி வரும் நிலையில், இந் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் இருந்து, வேளாண் திருத்த சட்டங்களை எதிர்க் கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி பேரிடம் அந்த கட்சியினர் கையெழுத்து பெற்று உள்ளனர்.





இந் கையெழுத்துடன் மனு ஒன்றை, அதாவது விவசாயிகளின் போராட்ட விவகாரத்தில் குடியரசு தலைவர் தலையிட்டு வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெறக்கோரும் மனுவை காங்கிரஸ் கட்சி தயாரித்து உள்ளது. இந் மனுவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) கட்சியினருடன் சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்குகிறார்.





முன்னதாக தில்லி விஜய் சவுக் பகுதியில் காலையில் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடக்கிறது. இந் ஆர்ப்பாட்டத்திலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.





விவசாயிகள் பிரச்சினையில், நடைமுறைக்கேற்ற அணுகுமுறையை பின்பற்றுமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, அதன் மூலம் விவசாயிகளின் துயரங்களை போக்குமாறும் வலியுறுத்தி உள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்