இடுகைகள்

உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழைகளுக்கு உதவுங்கள் : போப் ஆண்டவர்

ஏழைகளுக்கு உதவுங்கள் என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு நாதர் பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று ஆலையங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். ரோம் நகரில் உள்ள ஆலையத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். வேட்டிகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு வழிபாடுயில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இன்றைய கிறிஸ்துமஸ் செய்தியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது அவர், “இறைமகன் இயேசு நாதர் நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்...

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு வலுக்கிறது எதிர்ப்பு

அதிகார மோதலால் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு வலுக்கிறது எதிர்ப்பு நேபாளத் தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்த லில் நேபாள கம்யூனிஸ்டு கட்சி (என்.சி.பி)வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அந்தக் கட்சியின் தலைவர் கே.பி. சர்மா ஒலி பிரதமரானார். முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தஹால் பிரசந்தா என்.சி.பி. கட்சியின் நிர்வாகக் குழு தலைவராக இருந்தார். இந்த சூழ லில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு இந்தியாவின் எல்லைப் பகுதியை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரதமர் ஒலி இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து சீனாவுடன் நெருக்கம் காட்டினார். பிரதமர் ஒலியின் இந்த செயலை ஆளும் என்.சி.பி கட்சியின் நிர்வாகக் குழு வன்மை யாக கண்டித்தது. இந்த விவகாரத் தில் பிரதமர் ஒலிக்கும், என்.சி.பி கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசந்தாவுக்கும், இடையே நேரடி யாக மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து கே.பி. சர்மா ஒலி உடனடி யாக பிரதமர் பதவி யில் இருந்தும் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலக வேண்டுமென பிரசந்தாவுக்கு ஆதரவான கட்சியின் மூத...

அமெரிக்கா மீது சைபர் தாக்குதல் சீனா நடத்துகிறது : டிரம்ப் குற்றசாட்டு

அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அரசின் முக்கிய துறை-களையும், பல தனியார் நிறுவனங்-களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரி-கள் அண்மை-யில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணி-யில் ரஷியா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்-தன. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷியா தான் காரணம் என கூறினார். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் இதற்கு முரணான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது சைபர் தாக்குதலுக்கு ரஷியா அல்ல சீனா தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகை-யில், “சைபர் தாக்குதலின் பாதிப்பு-கள் உண்மை-யில் இருப்பதைவிட போலி ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளன. இது பற்றி எனக்கு முழுமை-யாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லாமே கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நாச வேலை-யில் ஈடுபட்டது சீனாவாக இருக்கலாம். ரஷியா இல்லை. சீனாவின் பங்கு பற்றி விவாதிப்...

நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பியது சீன விண்கலம்

படம்
நிலவில் இருந்து பாறைகளுடன், மண் உள்ளிட்ட மாதிரிகளை புவிக்கு கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா ‘சேஞ்ச்5’ என்ற விண்கலத்தை போன மாதம் 24-ம்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் போன 1-ம்தேதி நிலவை சென்றடைந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து லேண்டர்அசென்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு பாறைதுகள்கள், மண் மாதிரிகளை சேகரித்த லேண்டர்அசென்டர் நிலவு பரப்பிலிருந்து போன 3-ம்தேதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக்கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இந்நிலையில் நிலவை சுற்றி வந்து கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலம் புவியை நோக்கி புறப்பட்டுள்ளதாக சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சேஞ்ச்5 விண்கலத்தின் பாதை புவியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது. அந்த விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப் பாதை புவியை நோக்கித் திரும்பியது. இந்த விண்கலம் வியாழக்கிழமை அதிகாலை வேளையில் புவிக்கு திரும்பியதாக ...

குப்பை பொறுக்கியவரை கோடீஸ்வரராக்கிய அதிசய குப்பை பற்றி தெரியுமா?

படம்
குப்பை பொறுக்கியவரை கோடீஸ்வரராக்கிய குப்பை பற்றி தெரியுமா? தாய்லாந்தை சேர்ந்தவர் சோம்சாக் பூன்ரித், இவருக்கு 45 வயதாகிறது. தொடக்கத்தில் இவர் மீனவராக இருந்தார். ஆனால் புயலினால் இவரது படகு கடும் சேதம் அடைந்துள்ளது.இதனால் வாழ்வாதாரம் இழந்தவர், கடற்கரையில் குப்பைகளை சேகரிக்கத் துவங்கினார். அப்படி அவர் ஞாயிற்றுக்கிழமை சேகரித்தபோது கடற்கரையில் மஞ்சள் நிறத்தில் மெழுகுபோல் ஏதோ கிடைத்தது.அதைப் பார்த்ததும் அதை சந்தோசமாக எடுத்துக்கொண்டவர் அதை திமிங்கலத்தின் வாந்தி என கொண்டாடத் ஆரம்பித்தார். இது என்ன புதிதாக இருக்கிறது எனறு பார்க்கிறீர்களா? நடுக்கடலில் இருக்கும் திமிங்கலங்கள் சிலநேரம் அரிதான மீன்களை சாப்பிடுமாம். அவை செமிக்காமல் திமிங்கலத்தின் குடலிலேயே தங்கிவிடும். கொஞ்ச நாளில் அது ஒரு பெரிய பந்து மாதிரி மாரிவிடும். இதை வெகுநாள்களுக்கு பின்னர் திமிங்கலம் வாந்தியாக வெளியில் தள்ளுமாம். இந்த வாந்தி மெழுகு பந்து மாதிரி இருக்கும். இதை விஞ்ஞானிகள் ambergris என்று சொல்லுகின்றார்கள். இது வாசனை திரவியங்கள் செய்ய பயன்படும். இதன் விலையும் இதனால் அதிகமாக இருக்கும். இவர் மீனவர் என்பதால் இதுபற்றி அவருக்கு தெரி...

நிபுணர்கள் குழுவை அனுப்ப ஒப்புகொண்ட சீனா அனுமதி

படம்
நிபுணர்கள் குழுவை அனுப்ப ஒப்புகொண்ட சீனா அனுமதி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. வுகான் நகரில் உள்ள உணவிற்கான உயிருடன் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் விற்பனை செய்யும் மார்க்கெட்டிலிருந்து பரவியதாக சீனா விளக்கமளித்து. வுகான் மாகாணத்தை தனிமைப்படுத்தி சீனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்து பலி வாங்கி வருகிறது. கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றவில்லை. மார்க்கெட்டின் அருகில் உள்ள ஆய்வகத்தில் இருந்து பரவியது என பெரும்பாலான நாடுகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் உலக சுகாதார அமைப்பிற்கு சீனா சரியான தகவல்களை அளிக்கவில்லை. இது ஒரு தொற்று நோய் என சீனா அறிவிக்காமல் மறைத்து விட்டது என்ற குற்றச்சாட்டும் சாட்டப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உலக சுகாதார மையம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஆதரவை இழந்துள்ள நிலையில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எப்பாடி உருவானது என்பதை கண்டறிய சீனாவுக்கு நிபுணர்கள் க...

சீனாவில் ‘டிக்டாக்’ செயலி சேவை நிறுத்தம்

படம்
‘டிக்டாக்’ செயலி சேவை ஹாங்காங்கில் நிறுத்தம் பீஜிங்: சீனாவின் ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான செயலி ‘டிக்-டாக்’ பொழுது போக்கு செயலியாக  இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. ஆனால் லடாக் எல்லையில் சீனா நடத்திய அத்து மீறிய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தேசத்தின் பாதுகாப்பு கருதியும் ‘டிக்-டாக்’ மட்டுமின்றி 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு சமிபத்தில் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார். இந்த நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செயல்பாட்டைப் நிறுத்துவதாக ‘டிக்-டாக்’ நிறுவனம் அறிவித்துள்ளது. ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தொடர்ந்து ஹாங்காங்கில் ஏற்பட்ட சமீபத்திய நிகழ்வுகளின் விளைவாக அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

செய்யாத தப்புக்கு 19 ஆண்டுகள் தனனை அனுபவித்த ஆமை ; கண்கலங்க வைக்கும் காட்சி

படம்
தான் செய்யாத தப்புக்கு ஆமை ஓன்று 19 வருடங் கள் தண்டனை அனுபவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுதிதுள்ளது. மனிதர்களின் அன்றாட பழக்க வழக்கம், வாழ்க்கை முறையால் சுற்றுசூழல் மிகவும் பா திக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மனிதர்கள் பயன்படுத்திவிட்டு சாதாரணமாக தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி துண்டுகள், இரும்பு கம்பிகள் போன்றவற்றால் நமது கண்ணனுக்கு தெரிந்தும், தெரியா மலும் எவ்ளவோ உயிர்கள் து ன்பப்படுகிறது, அந்த வகையில், ஆராய்ச்சி யாளர்கள் மிகவும் வித்தியாசமான ஆமை ஒன்றை கடலில் இருந்து மீட்டனர். நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தத இந்த சம்பவத்தின் போது அந்த ஆமையின் வயது 19. அந்த ஆமையின் உடலில் சிறிய பிளாஸ்டிக் மோதிரம் ஓன்று மாட்டியுள்ளது. அந்த ஆமை பிறந்த சில நாட்களிலையே அந்த மோதிரம் அதன் உடலில் மாட்டப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். யாரோ ஒருவர் அந்த மோதிரத்தை கடலில் தூக்கி வீசும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் அந்த ஆமை தனது உடலில் சிக்கியிருக்கும் மோதிரத்தை எடுக்க முயற்சித் திருக்கும். ஆனால், அது முடியமால் போகவே, நாளுக்கு நாள் ஆமை பெரிதாக பெரிதாக, அந்த மோதிரம் ஆமை...

குவைத்தில் கொடுமைப்படுத்தப்படுவதாக வீட்டு வேலைக்காக சென்ற மதுரை பெண் கதறல்...!

வீட்டுவேலைக்காக குவைத்திற்குச் சென்ற மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், அங்கு தான் சித்திரவதை செய்யப்படுவதாகவும், இந்தியா திரும்ப உதவி செய்யுமாறும் சமூகவலைதளம் மூலம் கோரிக்கை வைத்திருப்பது வைரலாக பரவி வருகிறது. மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் வீட்டு வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் குவைத் சென்றுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் வீடியோ வெளியிட்டுள்ள மகேஸ்வரி, குவைத்தில் தான் அடித்து சித்ரவதை செய்யப்படுவதாகவும், தனக்கு உண்ண உணவோ, ஓய்வோ, ஊதியமோ கொடுக்கப்படுவதில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். தன்னோடு சேர்த்து 4 பெண்கள் குவைத் அழைத்துவரப்பட்டதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ள மகேஸ்வரி, தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டு வேலை செய்வதற்காக தான் குவைத் சென்றிருந்த போது, அங்கு தனது கைகள் இரண்டும் ஒடிக்கப்பட்டதாக தாயகம் திரும்பிய திருப்பூர் பெண் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளா...

நேபாள வெள்ளத்தில் 67 பேர் பலி

படம்
நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக பெய்து வரும் பருவமழை அந்த பகுதியை முற்றிலுமாக வெள்ளமயமாக்கியது.  

அமேசானில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க திட்டமா? - இதனை தெரிந்து கொள்ளுங்கள்

படம்
அமேசான் தள்ளுபடி விற்பனை அமேசான் தனது வருடாந்தர தள்ளுபடி விற்பனையை தொடங்கி உள்ள இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஜெர்மனியில் 2000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் ஆறு மணி நேர போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் தொழிற்சங்கம் கூறுகிறது. அதிக பணி சுமைதான் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமென்று கூறப்படுகிறது.

இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது

படம்
இந்தியாவுடனான பிரச்சனையின் காரணமாக ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த விமானத்திற்கான வான்வெளியை பாகிஸ்தான் இன்று திறந்தது. வான்வெளி மூடப்பட்டதால் இந்திய விமானங்கள் வேறு பாதையில் செல்ல நேரிட்டதால் பல மில்லியன் டாலர்கள் கூடுதலாக விமான நிறுவனங்களுக்கு செலவானது. இதன் காரணமாக ஏர் இந்தியா மோசமான நஷ்டத்தை சந்தித்தது. பயங்கரவாத பயிற்சி முகாமை எதிர்த்து நடத்தப்பட்டதாக கூறப்படும் பாலகோட் வான்வெளி தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பிப்ரவரி மாதம் இந்த வான்வெளியை மூடியது. இந்தத் தாக்குதல் இந்திய கட்டுபாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குப் பதிலடியாக நடந்தது. இந்த தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலி ஆயினர். பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தான் வான்வெளியை மூடியவுடன் பாகிஸ்தான் வழியாக செல்லவிருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் மாற்றிவிடப்பட்டன. அனைத்து விதமான விமானத்திற்காகவும் வான்வெளி திறக்கப்பட்டுவிட்டது என அதிகாரப்பூர்வ விமான வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் வான்வெளியை மூடியதால் இந்திய நிறுவனங்களான ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோஏர் போன்ற நிறு...

அடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிட கூடாது.. மீறினால்.. இந்தியாவுக்கு சீனா கடும் வார்னிங்!

படம்
பெய்ஜிங்: அடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிடக் கூடாது என்றும் மீறினால் நல்லுறவில் விரிசல் ஏற்படும் என்றும் இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 14-ஆவது தலாய் லாமாவாக இருப்பவர் டென்சின் கியாட்ஸோ. திபெத் மீது சீனா ஆக்கிரமிப்பு செய்த போது 1959-ஆம் ஆண்டு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார். இதையடுத்து ஹிமாச்சல பிரதேசத்தில் தர்மசாலாவில் அவருக்கு இந்திய அரசு குடில் அமைத்து கொடுத்தது. இந்த நிலையில் 84 வயதாகும் இவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. எச்சரிக்கை இந்த நிலையில் அடுத்த தலாய் லாமாவை சீனாவே தேர்வு செய்யும். இதில் இந்தியா தலையிடக் கூடாது. அதையும் மீறி தலையிட்டால் இரு தரப்பு உறவில் பாதிப்பு ஏற்படும். தலாய் லாமா தேர்வு என்பது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரபு என்றும் சீனா எச்சரிக்கை நியமனம் இதுகுறித்து சீன அதிகாரிகள் கூறுகையில் சீனாவுக்குள்ளேயே தலாய் லாமா தேர்வு செய்யப்படுவார். இதற்காக 10 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். வரலாற...