நாளை தொடங்குகிறது இந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி
மெல்போர்னில் நாளை தொடங்குகிறது இந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி
ஆஸ்தீலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக் கெட் அணி 4 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இ தில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத் தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டு இந்தியா மோசமான சாதனையை பெற்றது. இந்தியா- ஆஸ்தீலியா அணி கள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக் கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்க ளில் ஒன்றான மெல்போர்னில் நாளை (சனிக்கிழமை) தொடங்கு கிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல் கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
கிறிஸ் துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படு கிறது. ‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் கோதாவில் குதிக்கும் நாள் என்று அர்த்தம் கிடையாது. இதற்கென நீண்ட பாரம்பரியம் உண்டு. அந்த பெயர் எப்படி வந்தது என்பதை இங்கு பார்க்கலாம்.
- இங்கிலாந்து, ஆஸ்தீலியா, நியூசிலாந்து, கனடா போன்ற மேலைநாடுக ளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங் கள் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்திற்கு வருபவர் கள் அ தில் நன்கொடை செலுத்துவார் கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26-ந்தேதி அன்று பாக்சை பிரித்து அ தில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார் கள். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார் கள்.
- முன்பு தங்களிடம் ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர் கள், குடும்பத்தினரை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பார்க்க செல்லும் போது அவர்களின் முதலாளி கள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக ஒரு தரப்பினர் சொல்கிறார் கள்.
- முந்தைய காலத் தில் காற்றால் இயக்கப்படும் கப்பல்க ளில் மேற்கொள்ளப்படும் பயணம் ஆபத்து இன்றி பாதுகாப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பணம் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிக்கும். பயணம் வெற்றிபெற்றதும் அந்த பணம் பாதிரியாரிடம் ஒப்படைக்கப்படும். கிறிஸ்துமஸ் தினத்தன்று அது திறக்கப்பட்டு ஏழைகளுக்கு கொடுக்கப்படும். இதுவும் ‘பாக்சிங் டே’ என்று பெயர் உதயமானதற்கு ஒரு காரணமாக கூறப்படு கிறது.
1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்தீலியாவில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நடந்து வரு கிறது. சில காரணங்களால் குறிப்பிட்ட அன்றைய தினத் தில் போட்டியை நடத்த முடியாமல் போய்விட்டது. இருப்பினும் 1980-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்தீலிய கிரிக் கெட் வாரியம் பெற்று வரு கிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி ‘பாக்சிங் டே’ அன்று ஏதாவது ஒரு அணி அங்குள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத் தில் ஆஸ்தீலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும். இந்த முறை ‘பாக்சிங் டே’யில் இந்திய அணி மல்லுக்கட்ட இருக் கிறது.
கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் ஆஸ்தீலியா 15-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. இ தில் 2018-ம் ஆண்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 137 ரன் கள் வித்தியாசத் தில் ஆஸ்தீலியாவை துவம்சம் செய்ததும் அடங்கும்.
தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் எழுச்சி பெறுமா? என்ற எதிர்பாார்ப்பை இந்த டெஸ்ட் உருவாக்கி இருக் கிறது. அடிலெய்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் சில அதிரடி மாற்றங்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. மெல்போர்ன் ஸ்டேடியத் தில் ஒரே நா ளில் 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர் கள் அமர்ந்து போட்டியை ரசித்த வரலாறு உண்டு. ஆனால் தற்போது கொரோனா தடுப்பு நடைமுறை கள் அமலில் இருப்பதால் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரசிகர் கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார் கள் என்று ஆஸ்தீலிய கிரிக் கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்து இருக் கிறது.
நியூசிலாந்தின் மவுன்ட் மாங்கானு நகரில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணி கள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கு கிறது.
இதே போல் தென்ஆப்பிரிக்கா- இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டி (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) செஞ்சூரியனில் நாளை ஆரம்பிக் கிறது. இவையும், ‘பாக்சிங் டே’ போட்டி என்றே அழைக்கப்படு கிறது. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பது இன்னொரு சிறப்பு அம்சமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக